ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

இலாவாண காண்டம்

ADVERTISEMENTS

இலாவாண காண்டம்
உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்

தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்

என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே

கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான்.
121
ADVERTISEMENTS

உதயணன் வாசவதத்தை திருமணம்
இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்

நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்

புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன்

அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான்.
122
ADVERTISEMENTS

கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்

ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்

பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென

மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான்.
123

உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்
இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்

கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்

அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்

விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்.
124

ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்

எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்

பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்

எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன்.
125

மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்

உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்

விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த

உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான்.
126

யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்
இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்

முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என

பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்

அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே.
127

சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்

உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்

தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்

குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும்.
128

இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்

குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு

விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்

இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான்.
129

யூகியின் செயல்
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்

ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்

நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்

பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.
130

படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து

இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்

முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்

இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள்.
131

சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென

பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்

சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்

போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள்.
132

உதயணன் செயல்
அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்

தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்

புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்

தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன்.
133

உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை

வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக்

கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்

துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான்.
134

உதயணனன் தழைகொண்டுவரப் போதல்
கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர

நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்

கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை

சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான்.
135

யூகியின் செயல்
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்

துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று

மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்

தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர்.
136

சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை

இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்

தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்

துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான்.
137

யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்
என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு

நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி

நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே

என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள்.
138

உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்
சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்

கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்

றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்

கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன்.
139

பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்

மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்

நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே

வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.
140

உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்

எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்

நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென

விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான்.
141

மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்
மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை

பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்

கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்

புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன்.
142

மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்

தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்

வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை

நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும்.
143

நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்

கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்

சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி

பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.
144

வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ

நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ

காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ

தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான்.
145

அமைச்சர் தேற்றுதல்
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா

அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென

நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்

இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன்.
146

யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்
அண்ண றன்னிலை அறிந்த யூகியும்

திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு

மண்ணு வாவினை மன்னன் அண்டையில்

எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான்.
147

வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்

துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்

மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்

பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப.
148

வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்

இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை

கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்

தத்துவ முனியுளனாமினிச் சார்வோம்.
149

உதயணன் மகதநாடு செல்லல்
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி

அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி

வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ

ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே.
150