ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

நரவாகன காண்டம்

ADVERTISEMENTS

நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்

பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை

வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்

முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242

ADVERTISEMENTS

வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்

பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்

குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி

அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே.
243
ADVERTISEMENTS

உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்

பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்

மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்

பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே.
244

இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று

மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்

சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்

பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான்.
245

தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்

நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி

வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்

சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும்.
246

மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை

பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை

உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்

சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான்.
247

உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்

திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி

எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன

நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான்.
248

தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்

உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்

கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்

புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான்.
249

அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்

மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்

உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற

பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார்.
250

உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று

பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற

மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்

இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார்.
251

நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு

தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்

போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்

சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம்.
252

மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்

விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்

பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்

குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே.
253

நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி

பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்

மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்

பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே.
254

நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்

மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்

வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்

சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான்.
255

நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த

வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி

குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்

களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான்.
256

நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு

இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று

மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்

இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே.
257

மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து

மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்

திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று

பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே.
258

மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே

இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப

மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி

மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே.
259

வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி

இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்

பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி

நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே.
260

வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்

புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி

வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்

தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால்.
261

மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்

வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்

இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்

புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
262

தாது திர்ந்து தரணியிற் பம்பிட

மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்

பேதையைக் கண்டுபீடுடைக் களையும்

தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன்.
263

மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்

தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்

பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்

பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.
264

நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை

வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்

காட்டவே கண்டு காளை கலந்தனன்

ஊட்ட வேகணை யுன்னத மாரனே.
265

மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும்

துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்

உன்னி வந்தவள் போன தறிந்துரை

பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.
266

மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்

ஈனகஞ் செல வேலக் குழலியும்

தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்

கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன்.
267

நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்

கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்

எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி

கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.
268

போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்

காதலிற்சென்று காளைதன்னாமமும்

ஏதமில் தந்தை யெய்திய நாமமும்

போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
269

நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை

அந்த மில் குணத் தையநீ ராரென்

முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்

சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன்.
270

விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்

தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு

எஞ்சு லின்னிலை மையது வென்றென

விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
271

முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்

உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்

தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்

கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்
272

நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்

தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்

தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்

ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.
273

மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்

தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்

வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை

ஈன மில்கும் ரன்னினி தேறினான்.
274

நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்

தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்

இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென

மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
275

நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்

நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே

கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்

அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன்
276

நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்

தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்

அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்

கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
277

காவலன்னீல வேகற்குக் காரிகை

நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்

பூவிளங்கொடி புத்திரி நாமமும்

மேவி ளங்சூமநங்கவி லாசனை.
278

சுரும்பார் மாலையளித் துயிலிடைக்

கரும்பார் நன்மொழி காதற் கனவிடை

விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்

பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே.
279

வரைமி சைவந்து மன்னிய தன்முலை

அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே

விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்

அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள்
280

வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்

சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி

புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்

நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன்.
281

அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்

செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்

அறைந்த நின்மகட் காகு மணவரன்

நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
282

அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்

தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்

செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்

உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
283

நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டு

தேவனேயெனச் செல்வனுஞ்செலும்

காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்

ஏவலாளரோடினிதினெய்தினான்.
284

நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனை

இன்னி லக்கண மேற்ற காளையை

மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்

பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.
285

அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்

சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென

மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை

இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.
286

அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில்

அன்ன மென்னடை யமிர்த மன்னவள்

மின்னின் மாலையை விரகினேந்திமுன்

சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.
287

மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்

திருமணஞ் செய்து செல்வனின்புற

இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்

வெருவு மானச வேகன் றன்மனம் 288


நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும்

நாக நீள்புர நடுவிற் றோன்றலும்

காமனேயெனக் கன்னி மங்கையர்

தாமரைக்கணாற் றான்ப ருகுநாள்.
289

நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும்

வாம நாகர் தம் மலையிற் சென்றனன்

தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்

நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290

நாம விந்திரனன்க ருள்செயக்

காமனுக்கீந்து கண்டு சேவித்துத்

தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்

தோமனாலிரண் டொன்ற வாயிரம்.
291

நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின

மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்

தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்

அக்கணத்தினி லடிப்ப டுத்தினன்.
292

நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்

தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே

எஞ்ச லில்புரமிந்திரன்னென

மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன்.
293

நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட

விதன மின்றிநல்வேக வதியுடன்

அதிக போக வநங்க விலாசனை

அதிக வெண்ணா யிரமான தேவியர்
294

இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்

இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்

தனிய ரசினைத் தானி யற்றியே

நனிய தொன்றினன்னாம வேலினான்.
295

நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்

பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்

மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்

தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
296

புரம திக்கப்பூ மாலை தோரணம்

வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை

அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்

விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
297

நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்

இந்து வாணுத லெழின்ம டந்தையர்

வந்து மாமனை வணங்கி மாமியை

அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.
298

உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்

நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்

மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்

மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.
299

பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்

கொதிநுனைவேலின் கோமு கன்றனை

இதம ளித்திடு மிளவ ரைசென

அதுல நேமியனரசு நாட்டினான்.
300

நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்

றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி

வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்

இந்திரன்றானூ ரியல்பினேகினான்.
301

செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு

செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து

செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்

செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே.
302