நரவாகன காண்டம்
ADVERTISEMENTS
நரவாகன காண்டம்
வாசவதத்தை மசக்கை எய்துதல்
எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242
ADVERTISEMENTS
வாசவதத்தையின் விருப்பம்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே.
243
ADVERTISEMENTS
உருமண்ணுவாவின் உரை
உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே.
244
இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்
சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்
பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான்.
245
தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும்.
246
மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான்.
247
உதயணன் உரை
எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி
எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான்.
248
தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்
உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான்.
249
அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார்.
250
உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று
பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார்.
251
நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்
சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம்.
252
மக்கட்குப் பெயரிடுதல்
நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்
குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே.
253
நரவாகனன் கலைபயிலுதல்
நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி
பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே.
254
நரவாகனன் உலாப் போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்
மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான்.
255
நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த
வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான்.
256
நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே.
257
மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே.
258
மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே.
259
வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே.
260
வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால்.
261
மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்
மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
262
தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதையைக் கண்டுபீடுடைக் களையும்
தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன்.
263
மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்
ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.
264
நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே.
265
மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.
266
மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன்.
267
நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.
268
போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்
காதலிற்சென்று காளைதன்னாமமும்
ஏதமில் தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
269
நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில் குணத் தையநீ ராரென்
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன்.
270
விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்
தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்சு லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
271
முனிவனின் கூற்று
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்
272
நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்
மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.
273
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும் ரன்னினி தேறினான்.
274
நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
275
நரவாகனனை வித்தியாதரன் காணுதல்
நெடுங்க ரைமிசை நீர்மையினின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிகமழ் கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோ ர்மகனன்பிற் றொழுதனன்
276
நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றாலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணொளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
277
காவலன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவிளங்கொடி புத்திரி நாமமும்
மேவி ளங்சூமநங்கவி லாசனை.
278
சுரும்பார் மாலையளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கினெழுந்ததே.
279
வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுதன்னையர்க் குரைத்தனள்
280
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பினிறைஞ்சினன்
நல்ல ருந்தவனற்கனாக் கேட்டனன்.
281
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
282
அம்முனிவன்சொலரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
283
நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்
போவதே பொருள் புண்ணியற்கொண்டு
தேவனேயெனச் செல்வனுஞ்செலும்
காவலன்னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவலாளரோடினிதினெய்தினான்.
284
நீலவேகனின் ஆசை
கன்னல் விற்கணையில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்னனின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.
285
அநங்க விலாசனை சுயம்வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.
286
அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்
மன்ன ரீண்டியே வந்திருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகினேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.
287
மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திருமணஞ் செய்து செல்வனின்புற
இருவரும்புணர்ந்தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம் 288
நரவாகனனின் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காமனேயெனக் கன்னி மங்கையர்
தாமரைக்கணாற் றான்ப ருகுநாள்.
289
நரவாகனின் சிறப்புகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர் தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முதனிதிக ளொன்பதும் 290
நாம விந்திரனன்க ருள்செயக்
காமனுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமனாலிரண் டொன்ற வாயிரம்.
291
நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்
சக்க ரம்வலஞ் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்கணத்தினி லடிப்ப டுத்தினன்.
292
நரவாகனனின் வெற்றி
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புரமிந்திரன்னென
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன்.
293
நரவாகனனின் மாட்சி
மதன மஞ்சிகை மனங்குளிர்ந்திட
விதன மின்றிநல்வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர்
294
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன்னாம வேலினான்.
295
நரவாகனன் தந்தையைக் காண வருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
296
புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பினாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
297
நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்
தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.
298
உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந் தகாதலானேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.
299
பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநுனைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமியனரசு நாட்டினான்.
300
நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்திரன்றானூ ரியல்பினேகினான்.
301
செல்வநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரனனுப்பத் திருமணித் தேரினேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தானன்றே.
302