ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

உஞ்சைக் காண்டம்

ADVERTISEMENTS
உஞ்சைக் காண்டம்
கடவுள் வாழ்த்து
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க

அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்

பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்

இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே.
1
ADVERTISEMENTS

பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்

இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்

மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி

உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.
2
ADVERTISEMENTS

அவையடக்கம்
மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்

மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்

துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்

அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.
3

பயன்
ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்

கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்

மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்

வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ.
4