ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

வத்தவ காண்டம்

ADVERTISEMENTS

வத்தவ காண்டம்
உதயணன் அரசு வீற்றிருத்தல்
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்

பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில்

தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல்

மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின்
186
ADVERTISEMENTS

உதயணனின் கொடை
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப

ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே

ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்

கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான்.
187
ADVERTISEMENTS

உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய

பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத்

துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்

பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே.
188

உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்
அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான்

திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு

வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு

பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே.
189

பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி

பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்

மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல

விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள்.
190

உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்

ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய

வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து

கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான்.
191

உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்

அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள்

கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம்

இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார்.
192

உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்

தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன

ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை

வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே.
193

அமைச்சர் உருமண்ணுவா விடுதலை
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து

சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு

ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு

வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான்.
194

உருமண்ணுவா உதயணனை அடைதல்
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்

காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு

மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி

வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே.
195

வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்

ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும்

தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து

பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார்.
196

உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்

வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்

பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு

வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை.
197

யூகியின் உரை
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும்

திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று

மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்

அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே.
198

உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்
ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்

சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே

ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச

நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட.
199

பதுமாவதியின் வேண்டுகோள்
யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான்

நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின்

பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்

ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான்.
200

வாசவதத்தையின் ஊடல்
என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து

சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில்

வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்

கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள்.
201

உதயணன் ஊடலைப் போக்குதல்
பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்

கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன

ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்

நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான்.
202

இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்
நங்கைதன் மனங்கலங்கா நலம்புகழ்ந் தூடனீக்கி

வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ்வ வேபோற்

பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்

சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தானன்றே.
203

உருவிலி மதன்கணைகளுற்றுடன் சொரியப் பாய

இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்

திரிநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய

மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே.
204

கோதையுஞ் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க

காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதினோடப்

போதவும் விடாது புல்லிப் புரவலனினியனாகி

ஏதமொன் றின்றிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில்.
205

உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன்னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே

ஊனுமிழ் கதிர்வேன் மன்னனுருமண்ணுவாவு தன்னைச்

சேனைநற்பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி

ஈனமி விராசனைய யெழில்வேள்வி யாற்கொ டுத்தான் .
206

உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே

இயைந்தநல் லிடபகற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த

செயந்தரு வளநன்னாடு சிறந்தவைம் பதும் அளித்து

வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தானன்றே.
207

யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல

சேதிநன்னாட்டை யூகிக் காக நற்றிறத்தினீந்து

சோதிநல்லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்

வீதி நன்னகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான்.
208

உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் தூதர் வந்து

வாசகம் தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து

வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட

வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின்றானே.
209

ஓலையில் வந்த செய்தி
பிரச்சோதன னன்றா னென்னும் பெருமகனோலை தன்னை

உரவுச்சேர் கழற்கான் மிக்க வுதயண குமரன் காண்க

வரவுச்சீர்க் குருகுலத்தின் வண்மையான் கோடல் வேண்டி

வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன்.
210

கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்

சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு

நலந்திகழ் தேரினேற்றி நன்குவுஞ் சயினி தன்னிற்

பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும்.
211

கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்

மாமனான் மருகனீ யென் மாமுறை யாயிற் றென்றும்

ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்

பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான்.
212

உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்
மன்னவனனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு

மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப

மன்னனு முடிய சைத்த மைச்சனை நெடிது நோக்கி

மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பினானே.
213

பிரச்சோதனன் முரசறைவித்தல்
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கெள சாம்பியும்

பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்

ஆர்மிகு முரச மறைகென நகரில்

தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன்.
214

யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்
தருமநன்னூல்வகை சாலங் காயனோ

டருமதி யூகியு மன்பினுரைத்தான்

பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்

திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான்.
215

கல்விய தகலமுங் காட்சிக் கினிமையும்

சொல்லருஞ் சூட்சியுஞ் சொற் பொருட் டிண்மையும்

வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்

றெல்லையில் குணத்தினன் என்றுரை செய்தனன்.
216

இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்

இன்னவ ரின்றி யிலையர சென்றே

இன்னன நீடிய வியல் பிற் பிறவுரை

மன்னவனாடி மகிழ்வித் திருந்த பின் 217


யூகியின் திருமணம்
சாலங் காயன் சகோதர மானநன்

னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்

பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்

கோலங் காரன்ன கூரெயி றாப்பியும்.
218

பரதகன்றங்கை பான்மொழி வேற்கணி

திருநிலம்புகழ் திலதமா சேனையும்

பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்

அரிய யூகிக் கரசன் கொடுத்தளன்.
219

சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்

நன்முது நகர்முன்னாடிப் போவெனப்

பன்மதி சனங்கள் பரவி வழிபட

வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன்.
220

யூகி உதயணனை அடைதல்
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்

இத்தல முழுது மாளுமினியநன் மாமன் சொன்ன

ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துடனிருந்த போழ்தில்

சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் செல்வார்.
221

உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திபனினியனாகிக்

கலந்துகப் பூசல் காணக் களிற்றின்மீதேறி வந்து

கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப

வந்தனன் பதுமை தோழி வனப்பிராசனையென் பாளாம்.
222

மகளிரின் பந்துப் போர்
ஓரெழுபந்து கொண்டே யொன்றொன்றி நெற்றிச் செல்ல

பாரெழு துகளு மாடப் பலகலனொலிப்ப வாடிச்

சீரெழு மாயி ரங்கை சிறுந்தவ ளடித்துவிட்டாள்

காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள்.
223

வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்

காய்பொனின் கலன்களார்ப்பக் கார்மயிலாட்டம் போல

ஆயிரத் தைஞ்நூறேற்றி யடித்தன ளகல வப்பால்

ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராபதிபந்து கொண்டாள்.
224

சீரேறும் இமில் போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்

பாரோர்கள் இனிது நோக்கும் பலகலஞ் சிலம்போடார்ப்ப

ஈராயிரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்

தோராத வழகி தத்தை தோழிவிச்வ லேகை வந்தாள்.
225

கருங்குழ நெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெடுத்துப்

பெருங்கலனினிதினார்ப்பப் பெய்வளை கலக லென்ன

ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ் நூ றடிட்த்து விட்டாள்

கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள்.
226

ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்

சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்

சீரின்மூவாயிரங்கை சிறந்தவ ளடித்த பின்பு

பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதினோக்கா.
227

உதயணன் விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்

காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட

பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்

தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே.
240

உதயணனின் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத்

துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்

திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க

நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான்.
241